Sunday, October 23, 2011

டீரிம்ஸ் திரைப்படத்தின் கனவு காட்சிகளில் வரும் முரண்பாடுகள்



சிக்மன்ட் பிராய்டு (சைக்கோ அனாலைஸிஸ்) ஆய்வின் மூலம் மனித மூளையின் செயல்பாடுகளை மூன்று நிலைகளாக குறிக்கிறார்.

1. ஐ.டி (அகமனம்)
2. இகோ
3. சூப்பர் இகோ

ஐ.டி- அகமனமானது தூங்கும் நிலையிலோ அல்லது சுயநினைவற்று இருக்கும் போதோ அவ்வப்போது தன்னுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தும். இதையே கனவு நிலை என்று கூறுகின்றோம்.

இகோ - மனதின் விழிப்பு நிலை, இந்நிலையில் மூளையானது நெறிகளை பகுத்தறிந்து, தற்காப்பு நடவடிக்கை அல்லது தன்னை விழிப்புடன் செயலாற்ற செய்யும்.

சூப்பர் இகோ - மனதின் அகஉணர்ச்சியை உணத்துவதானவும், பகுத்தறிந்து உணர்ந்தவற்றை உறுதிப்படுத்த விழைகிறது.

விழித்திருக்கும் போது, சூப்பர் இகோவால் விருப்பங்கள், விருப்பங்களை வெளிப்படுத்தும் தன்மை ஆகியவற்றை அடக்கப்படுகின்றது. (அடிமை முறை என்பது நம்முடைய மூளையிலிருந்தே உருவாகிறது) கனவு நிலையில், காட்சிக்கு புலனாகாத அல்லது நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் எண்ணங்கள் வெளிப்படுகின்றன. இந்நிலையில் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட விருப்பங்களை அடைய நினைக்க தூண்டுகிறது. தூக்கத்தில் கனவுகண்டு திடிரென்று விழித்து எழும்போது சூப்பர் இகோ வேலை செய்ய துவங்கி விடுகின்றது.

கனவு நிலையில் என்பது வெற்றிடங்களால் ஆனவை அல்ல. முரண்பாடுகளால் நிரப்பட்டவை. இவ்வாறாக சில திரைப்படங்களில் வரும் கனவு காட்சிகளில் முரண்பாடுகள் இன்றி நடமுறையில் உள்ளது போன்றே காட்சியமைக்கப்படுகின்றன. ஆனால் அகிரோ குரோசோவா எழுதி, இயக்கிய Sunshine Through The Rain என்ற திரைப்படத்தில் கனவுக்காட்சிகள் எவ்வாறு காட்சியமைக்கப்பட்டுள்ளது என்றால் படம் ஆரம்பிக்கும் போது ஒரு நாள் எனக்கு நேர்ந்தது கனவு என்று திரையில் எழுத்து மறைந்ததும், கதவுயில்லாத பெரிய வாயிலை கொண்ட வீட்டின் உள்ளிருந்து சிறுவன் கதவை திறந்து கொண்டு வெளியே வருகிறான். வெளியில் வெயிலோடு சேர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. முதலில் வீட்டின் முற்றத்தில் வழியாக மெதுவாக நடந்து வந்தவன் திடிரென்று ஓடி வந்து கதவில்லாத வாயிலில் நிற்கிறான். வெயிலால் உருவான வாசலின் நிழலானது சிறுவன் மேல் படுவதால் இடை வரை வெளிச்சமாகவும், இடைக்கு மேல் சற்று மங்களாகவும் காட்சி காணப்படுகின்றது.முற்றத்தின் இடப்புற வாசலிலிருந்து குடையோடு சிறுவனின் தாய் வருகிறாள். முற்றத்தில் காயவைக்கப்பட்டுள்ள பண்டங்களை மழையிலிருந்து அகற்றுகிறாள். சிறுவன் வெளிவாசலில் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக நகர்கிறான். அவனுக்கு பின்னால் முற்றத்தில் பண்டங்களை மீட்டுக்கொண்டிருந்த அவனின் தாய் வந்த வாசல் வழியாக சென்று விட்டு மறுபடியும் முற்றத்தில் காய வைக்கபட்டிருந்த எஞ்சிய பண்டங்களை எடுக்கிறாள். அப்போது வாசலில் நிற்கும் தன் மகனான அச்சிறுவனை வீட்டிற்குள் செல்லும்படி கூறுகிறாள் சிறுவன் வாசலில் முற்றத்தில் நிற்கும் தன்னுடைய தாயை பார்த்து திரும்பி நிற்கிறான். தாய் வானத்தை பார்த்து கூறுகிறாள் வெயில் அடித்துக் கொண்டிருக்கிருக்கும் இதே வேளையில் மழையும் பெய்து என்கிறாள். இந்த மாதிரியான நேரத்தில் நரிகள் கல்யாணத்திற்காக ஊர்வலமாக செல்லும் அவற்றை யாரும் பார்க்கக்கூடாது என்று அவைகள் விரும்பும். அவ்வாறு மீறி நீ பார்க்க நேரிட்டால் அவைகளுடைய கோபத்திற்காக ஆளாக நேரிடும். என்று அச்சிறுவனை பார்த்து கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று வீடுகிறாள் தாய். திரும்பி பார்க்கிறான் வெளியே சிறிது நேரம் கழித்து முற்றத்தை நோக்கி திரும்பி பார்க்கிறான் அவனுடைய தாய் அங்கில்லை மறுபடியும் வெளியே பார்த்தவாறு திரும்பி நிற்கிறான்.
அடுத்த காட்சி :
பெரிய மரங்கள் நிறைந்த காட்டில் மரங்களுக்கிடையில் பச்சை நிற புதர் செடிகள் இருக்கின்றன. அங்கு இசை ஆரம்பமாகிறது. மேகங்கள் புகை மூட்டமாக வருகிறது. சிறுவன் மரத்தின் பின்புறத்தில் ஒளிந்திருந்து பார்க்கிறான். கையில் இசை கருவிகள் இல்லை வேறு ஏதோ உருளையாக வைத்திருக்கிறார்கள். இரு வரிசைகளாக மனித உருவில் முகத்தில் வேடமிட்டு இசைக்கேற்ப நடந்து வருகிறார்கள். இச்சிறுவன் ஒளிந்திருக்கும் மரத்தை கடந்து செல்லும் போது நரிகளாக சித்தரிக்கப்பட்டவர்கள் பார்த்து விட அங்கிருந்து ஓடி வீடு வருகிறான், வாயிலில் அவனுடைய தாய் அவனை பார்த்து போய் பார்த்துட்டு வாரீய என்று கேட்கிறாள். மேலும் கோபபட்ட நரிகள் வீட்டிற்கு வந்துவிடும் அதனால் உன்னை வீட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை, அச்சிறுவனிடம் கத்தியை கொடுத்து அவை உன்னை விடாவிட்டால் நீ கத்தியால் உன்னை கொன்று கொல்! உடனடியாக சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வந்து என்னிடம் கத்தியை திருப்பி கொடு என்றி கூறிவிட்டு ஒரு பக்க கதவை அடைக்கிறாள். அவைகள் எப்போதுமே மன்னிப்பதில்லை எனவே நீ சாக தயாராக இரு என்று கூறிக் கொண்டே அருகில் இருக்கும் மற்றொரு கதவையும் நகர்த்துகிறாள். அப்போது அச்சிறுவன் சிறிது முன் ஓடி வந்து அவைகள் எங்கு வாழும் என்று கேட்கிறான். தேடி போ! அவைகள் வானவில்லின் அடியில் இருக்கும் என்று கூறிவிட்டு கதவை அடைத்து விடுகிறாள் அன்னை. கதவை தள்ளி பார்க்கிறான் சிறுவன் அருகில் இருக்கும் கதவையும் தட்டி பார்த்து விட்டு திரும்பி நின்று பார்த்து விட்டு பின் செல்கிறான்.


முரண்பாடுகள்:
நரிகள் திருமணம் செய்து கொள்ளும் என்று கூறப்படுவது
நரிகள் மழையும் வெயிலுமாக பருவ நிலை நிழவும் போது திருமணம் செய்து கொள்ளும் என்று கூறுவது
நரிகள் கல்யாணத்திற்காக ஊர்வலமாக செல்லும் என்பது
நரிகள் என்பவை நரிகள் போல் அல்லாமல் மனித உருவத்தில் உடலையும், முகத்தில்
அன்னை தன் சேயிடம் கத்தியை கொடுத்து அவனை தற்கொலை செய்து கொள்ள சொல்வது
நரியிடம் மன்னிப்பு கேட்க சொல்வது
தாய் தன் குழந்தையை வீட்டிற்குள் வரவிடாமல் பூட்டிக் கொள்வது

உயிரற்ற பொருட்கள் (Non Living Elements) மழை, வெயில், மேகங்கள் நடுபக்கத்திலிருந்து திறக்கும் படியான இரு பெரிய வாயிற் கதவு, சின்ன வாயிற் கதவு, கத்தி,
Living Elements : சிறுவன், அவனுடைய தாய், மரங்கள், புதர் செடிகள்

No comments:

Post a Comment